Saturday, January 11, 2014

சிம்புவை வெளியேற்றிய நயன்தாரா பாண்டிராஜ் அதிர்ச்சி

சிம்புவை வெளியேற்றிய நயன்தாரா பாண்டிராஜ் அதிர்ச்சி


பாண்டிராஜ் இயக்கி வரும் இந்த படத்தின் இயக்கத்தில் சிம்பு மீண்டும் நயன் தாராவுடன் இணைந்து நடிக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் நேற்று சென்னையில் நடந்தது.

நயன் தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. சிம்புவுக்கு நேற்று காட்சிகள் எதுவும் இல்லை யென்றாலும் தயாரிப்பாளர் என்ற முறையில் படப்பிடிப்புக்கு வந்திருந்தாராம். இதனால் நயன் தாராவுக்கு டென்ஷன் எகிறியுள்ளது.

உடனே இயக்குனர் பாண்டிராஜை கூப்பிட்டு படப்பிடிப்புக்கு சம்மந்தம் இல்லாதவர்களை முதலில் வெளியேற்றுங்கள். அப்போதுதான் படப்பிடிப்பு நடக்கும், இல்லை என்றால் நான் வெளியேற வேண்டியநிலை இருக்கும் என கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிம்பு நான் படத்தின் தயாரிப்பாளர் நான் ஏன் வெளியேற வேண்டும் என பதிலுக்கு எகிற பிரச்சனை பெரிதாவதை கண்டு டி.ராஜேந்தருக்கு போன் செய்துள்ளார் பாண்டிராஜ். அதன்பின்னர் சிம்பு வெளியேற படப்பிடிப்பு தொடர்ந்து நடந்ததாம். இந்த சம்பவம் கோலிவுட்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment