Monday, January 13, 2014

சிக்கலில் அனுஷ்காவின் படம்

www.sudarcinema.com
அனுஷ்கா நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘பாகுபலி’ படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கில் அனுஷ்கா நடிக்கும் பாகுபலி படத்தினை ராஜ்மவுலி இயக்குகிறார்.
பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்திற்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவை சேர்ந்த ஜெயின் சங்க அமைப்பினர் பாகுபலி என்ற பெயரை பட தலைப்பாக பயன்படுத்தக்கூடாது என்று இயக்குனருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
அதில், பாகுபலி எனப்படும் கோமதேஸ்வரா பெயரை புனித பெயராக நாங்கள் மதிக்கிறோம்.
வன்முறையில் எங்கள் மதத்தினருக்கு உடன்பாடு கிடையாது.
வன்முறையை மையமாக வைத்து உருவாக்கப்படும் ஒரு படத்துக்கு இப்பெயரை வைக்க கூடாது.
மேலும் எங்கள் சமுதாயத்தின் அனுமதி இல்லாமல் இந்த பெயரை சினிமாவில் பயன்படுத்தக்கூடாது.
10ம் நூற்றாண்டை சேர்ந்த ஜெயினர்களின் ஆதிபுராணத்தில் பாகுபலி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே படத்தில் இவரது வாழ்க்கை வரலாறு பயன்படுத்தப்பட்டிருக்கிறதா? அல்லது படத்தின் தலைப்பாக மட்டுமே வைக்கப்பட்டுள்ளதா? என்று விளக்கம் அளிக்க வேண்டும்.
மேலும் இப்பெயரை பயன்படுத்தாமல் வேறு பெயரை படத்துக்கு வைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment